sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கச்சத்தீவு விவகாரம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

/

கச்சத்தீவு விவகாரம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

கச்சத்தீவு விவகாரம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

கச்சத்தீவு விவகாரம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

17


ADDED : ஏப் 01, 2024 10:34 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 10:34 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கச்சத்தீவு விவகாரம் குறித்து கடந்தகால வரலாற்றை சுட்டிக்காட்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 1974ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய மீனவர்களின் உரிமைகள் தொடர்பாக 1974ம் ஆண்டில் பார்லிமென்டில் விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த 1974ல் ஒப்பந்தம் கையெழுத்தான போது இந்திய மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 1976ல் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தான மற்றொரு ஒப்பந்தத்தில் மீனவர்களின் உரிமை மறுக்கப்பட்டது.

நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விளக்கம்

கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு நான் 21 முறை பதில் கடிதம் அனுப்பி உள்ளேன். தங்களுக்கு பொறுப்பு இல்லை என்கிற வகையில் திமுக, காங்கிரசும் பேசுகிறது. கச்சத்தீவு தொடர்பான உண்மைகளை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைத்தவர்களை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளவே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

6,184 இந்திய மீனவர்கள் கைது

கச்சத்தீவுக்கு உரிமை கோரும் ஆவணங்களை ராமநாதபுரம் ராஜா வைத்திருந்தார். பார்லிமென்டில் கடந்த 5 ஆண்டுகளில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பலமுறை விவாதித்துள்ளோம். கடந்த 20 ஆண்டுகளில் இந்திய மீனவர்கள் 6,184 பேரை இலங்கை அரசு இதுவரை கைது செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us