sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிருங்கேரி ஸ்ரீ சாரதா திருமடத்தில் ஜகத்குரு 'நாதாபி வந்தனம்' நிகழ்ச்சி

/

சிருங்கேரி ஸ்ரீ சாரதா திருமடத்தில் ஜகத்குரு 'நாதாபி வந்தனம்' நிகழ்ச்சி

சிருங்கேரி ஸ்ரீ சாரதா திருமடத்தில் ஜகத்குரு 'நாதாபி வந்தனம்' நிகழ்ச்சி

சிருங்கேரி ஸ்ரீ சாரதா திருமடத்தில் ஜகத்குரு 'நாதாபி வந்தனம்' நிகழ்ச்சி


ADDED : மே 23, 2024 01:47 AM

Google News

ADDED : மே 23, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடக மாநிலம், சிருங்கேரி ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள் சன்யாசம் மேற்கொண்டு, 50 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது.

இதை முன்னிட்டு, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில், நடப்பு ஆண்டு முழுதும், 'சுவர்ண பாரதீ' என்ற பெயரில் உற்சவம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், கடந்த, 19ம் தேதி, 'ஜகத்குரு நாதாபிவந்தனம்' என்ற தலைப்பில், 60 இசைக்கலைஞர்கள் பங்கேற்று, சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பாரதீ தீர்த்த சுவாமிகள் முன்னிலையில், காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள், ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், தன் குரு பெயரில் இயற்றிய குரு வர்ய தஸ ஸ்லோகங்கள் இசைக்கப்பட்டன.

ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் முன்னிலையில், மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதி சங்கரர் மற்றும் சிருங்கேரி ஆச்சார்யார்கள் எழுதிய கீர்த்தனைகள் இசைக்கப்பட்டன.

ருத்ர பட்டிணம் சகோதரர்கள், வாகீஷ், சிருங்கேரி சகோதரிகள், நவநீதகிருஷ்ணன், தியாகப்ரம்ம கைங்கர்ய டிரஸ்ட் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஸ்ரீ மடத்தின் முதன்மை நிர்வாகி முரளி, இசைக்கலைஞர்களை பாராட்டி, நினைவுப்பரிசு வழங்கினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us