sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ராணுவத்தில் மேற்கொள்ள காங்., முயற்சி'

/

'மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ராணுவத்தில் மேற்கொள்ள காங்., முயற்சி'

'மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ராணுவத்தில் மேற்கொள்ள காங்., முயற்சி'

'மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ராணுவத்தில் மேற்கொள்ள காங்., முயற்சி'

8


ADDED : ஏப் 26, 2024 01:07 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 01:07 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விசாகப்பட்டினம்: “ராணுவத்தில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த, காங்கிரஸ் ரகசிய முயற்சி மேற்கொள்கிறது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, 2006ல் ஆயுதப்படைகளில் மத அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை பரிந்துரைத்தது.

இது காங்கிரசின் தற்போதை தேர்தல் அறிக்கையில் எதிரொலிப்பது கவலையளிக்கிறது. சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி, ராணுவத்திலும் இந்த யோசனையை விரிவுப்படுத்தினால், அது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு நல்லதல்ல.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், ஓ.பி.சி.,களுக்கு ஒதுக்கப்பட்ட 27 சதவீதத்துக்குள், முஸ்லிம்களுக்கு 6 சதவீதமும், பிற சிறுபான்மையினருக்கு 2 சதவீதமும் பரிந்துரைத்தது. காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள், நம் சமூகத்தை பிளவுபடுத்துவதாக உள்ளது.

இது, மத அடிப்படையில், பின்வாசல் வழியாக நாட்டை பிளவுபடுத்த மேற்கொள்ளும் ரகசிய முயற்சியாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரத்து செய்யப்படும்'

தெலுங்கானாவில் உள்ள மேடக் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ரகுநந்தன் ராவை ஆதரித்து, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: சமீபத்தில் தான் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இங்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை காங்கிரஸ் பாதுகாக்கும் என, முதல்வர் ரேவந்த் ரெட்டி கடந்த மாதம் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் தெலுங்கானாவை டில்லியின் ஏ.டி.எம்.,மாக மாற்றியுள்ளார். ஆந்திராவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம். அதனை எஸ்.சி., - எஸ்.டி., - பி.சி., உள்ளிட்ட பிரிவினருக்கு பகிர்ந்து அளிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us