sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு வனப்பகுதியில் கேமரா பொருத்த முடிவு

/

பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு வனப்பகுதியில் கேமரா பொருத்த முடிவு

பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு வனப்பகுதியில் கேமரா பொருத்த முடிவு

பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு வனப்பகுதியில் கேமரா பொருத்த முடிவு

1


ADDED : மே 14, 2024 06:50 AM

Google News

ADDED : மே 14, 2024 06:50 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்ய, கர்நாடக வனப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்தியா உட்பட உலகம் முழுதும் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு, பல்வேறு விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால், பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளின் வனப்பகுதியில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

இங்கு அடர்ந்த வனப்பகுதிகள், பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்விடமாக இருப்பதால், மத்திய அரசு, கர்நாடகாவை தேர்வு செய்துள்ளது. மாநிலத்தின், நாகரஹொளே, தாண்டேலி, ஷிவமொகா உட்பட சில வனப்பகுதிகளில் தற்போது ஆரம்பிக்கும் ஆய்வு, ஐந்து ஆண்டுகள் வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆய்வுக்காக, வனத்தின் குறிப்பிட்ட இடைவெளியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த மாதத்திற்குள் கேமராக்கள் பொருத்துவதற்கு இடம் நிர்ணயிக்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு, 2.19 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மழை, வெயில் என அந்தந்த பருவ காலங்களில் கேமராவில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில், பருவ நிலை மாற்றம் குறித்து, தனி ஆய்வு மையம் அமைத்து, 365 நாட்களும் 24 மணி நேரமும் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

விவசாயம், தோட்டக்கலை, மின்சாரம், நீர்ப்பாசனம் உட்பட 42 மத்திய, மாநில அரசு துறைகள் ஆய்வில் ஈடுபட உள்ளன.






      Dinamalar
      Follow us