/செய்திகள்/வர்த்தகம்/பொது/ திறன் மேம்பாட்டு பயிற்சி மத்திய அரசு ஒப்பந்தம்

 திறன் மேம்பாட்டு பயிற்சி மத்திய அரசு ஒப்பந்தம்

 திறன் மேம்பாட்டு பயிற்சி மத்திய அரசு ஒப்பந்தம்

 திறன் மேம்பாட்டு பயிற்சி மத்திய அரசு ஒப்பந்தம்

 திறன் மேம்பாட்டு பயிற்சி மத்திய அரசு ஒப்பந்தம்

ADDED : ஜன 24, 2026 02:18 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: இந்தியாவின் தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு சூழலை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகமும், உலக பொருளாதார மன்றமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்,'ஸ்கில் ஆக்சிலரேட்டர்' என்ற திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட உள்ளது.

இது, வேலைவாய்ப்புக்கு தேவையான திறன்களை மிக வேகமாகவும், தற்கால தேவைக்கு ஏற்பவும் வழங்குவதற்காக உருவாக்கப்படும் ஒரு கூட்டு தளம்.

வழக்கமாக அரசும், தனியார் நிறுவனங்களும் தனித்தனியாக பயிற்சிகளை வழங்கும் நிலையில், இத்திட்டத்தின் கீழ், அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகிய மூன்றும் ஒன்றாக இணைந்து செயல்படும்.

@block_P@தொழில் துறைக்கு தேவையான நவீன திறன்களை இளைஞர்களுக்கு பயிற்றுவிக்க, இது வழிவகுக்கும்