ADDED : செப் 14, 2025 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:உலகின் முன்னணி 20 வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வங்கிகளை வரும் 2047ம் ஆண்டுக்குள் இடம்பெறச் செய்ய, மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் எச்.டி.எப்.சி., வங்கி ஆகியவை தற்போது உலக அளவில் கணிசமான இடம் வகிக்கின்றன.
வங்கிகளின் ஊழியர்களுக்கு திறன் வளர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு, இயக்குநர் வாரியத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து, நிதிச்சேவைத் துறை சார்பில் நடந்த பி.எஸ்.பி., மந்தன் 2025 மாநாட்டில் வி வாதிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் சொத்து மதிப்பு பட்டியலில் எஸ்.பி.ஐ., 43வது இடத்திலும், எச்.டி.எப்.சி., 73வது இடத்திலும் உள்ளன.