sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 வைப்ரன்ட் எனர்ஜியை வசப்படுத்திய ஐநாக்ஸ் கிளீன்

/

 வைப்ரன்ட் எனர்ஜியை வசப்படுத்திய ஐநாக்ஸ் கிளீன்

 வைப்ரன்ட் எனர்ஜியை வசப்படுத்திய ஐநாக்ஸ் கிளீன்

 வைப்ரன்ட் எனர்ஜியை வசப்படுத்திய ஐநாக்ஸ் கிளீன்


ADDED : டிச 22, 2025 02:12 AM

Google News

ADDED : டிச 22, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்குவாரி மற்றும் பிற பங்குதாரர்களிடம் இருந்து, வைப்ரன்ட் எனர்ஜி நிறுவனத்தை முழுமையாக வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், ஐநாக்ஸ் கிளீன் எனர்ஜி கையெழுத்திட்டுள்ளது.

உ.பி.,யின் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி நிறுவனமான ஐநாக்ஸ் கிளீன் எனர்ஜி, கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய்க்கு வைப்ரன்ட் நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

ம.பி., மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வைப்ரன்ட் எனர்ஜி நிறுவனத்துக்கு சொந்தமாக, 1,337 மெகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. 800 மெகாவாட் மின் உற்பத்தி செயல்பாட்டில் உள்ளது. இவையனைத்தும் ஐநாக்ஸ் கிளீன் எனர்ஜி நிறுவனத்தின் கீழ் வரவுள்ளன.

இது குறித்து ஐநாக்ஸ் கிளீன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவான்ஷ் கூறியதாவது:

இந்த கையகப்படுத்துதல் வாயிலாக இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 3 ஜிகாவாட்டாக அதிகரிக்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us