sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 'மூலிகை கஷாயத்துக்கு தேநீர் என்ற பெயர் கூடாது'

/

 'மூலிகை கஷாயத்துக்கு தேநீர் என்ற பெயர் கூடாது'

 'மூலிகை கஷாயத்துக்கு தேநீர் என்ற பெயர் கூடாது'

 'மூலிகை கஷாயத்துக்கு தேநீர் என்ற பெயர் கூடாது'


ADDED : டிச 26, 2025 01:03 AM

Google News

ADDED : டிச 26, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மூலிகை அல்லது பிற தாவரங்கள் அடிப்படையிலான கஷாயத்துக்கு, தேநீர் என்ற பெயரை பயன்படுத்த கூடாது என தயாரிப்பு நிறுவனங்களுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உத்தரவிட்டுள்ளது.

மேலும் அது தெரிவித்து உள்ளதாவது:

சில நிறுவனங்கள் 'காம்பேலியா சினென்சிஸ்' என்ற உண்மையான தேயிலை செடியிலிருந்து தயாரிக்கப்படாத பொருட்களையும் 'தேநீர்' என்ற பெயரில் விற்பனை செய்வது கவனத்திற்கு வந்துள்ளது. 'மூலிகை டீ', 'மலர்கள் டீ' போன்று தவறாக சந்தைப்படுத்தப்படுகின்றன.

'காம்பேலியா சினென்சிஸ்' என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் பானங்களான காங்க்ரா டீ, கிரீன் டீ மற்றும் இன்ஸ்டன்ட் டீ ஆகியவற்றை மட்டுமே 'தேநீர்' என்று குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு உணவு பொட்டலத்திலும், அதில் உள்ள உணவின் உண்மைத்தன்மை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

எனவே, இந்த உத்தரவை அமல்படுத்தப்படுவதை கண்காணித்து, மீறும் நிறுவனங்கள் மீது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us