sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பசுமை மின்சாரத்துக்கு தனி நிறுவனம் உதயம்: மின் உற்பத்தி பகிர்மான கழகம் மூன்றாக பிரிப்பு

/

பசுமை மின்சாரத்துக்கு தனி நிறுவனம் உதயம்: மின் உற்பத்தி பகிர்மான கழகம் மூன்றாக பிரிப்பு

பசுமை மின்சாரத்துக்கு தனி நிறுவனம் உதயம்: மின் உற்பத்தி பகிர்மான கழகம் மூன்றாக பிரிப்பு

பசுமை மின்சாரத்துக்கு தனி நிறுவனம் உதயம்: மின் உற்பத்தி பகிர்மான கழகம் மூன்றாக பிரிப்பு


UPDATED : பிப் 03, 2024 03:02 PM

ADDED : பிப் 03, 2024 05:12 AM

Google News

UPDATED : பிப் 03, 2024 03:02 PM ADDED : பிப் 03, 2024 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மறுசீரமைக்கும் வகையில், மூன்று நிறுவனங்களாக பிரித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் காற்றாலை, சூரியசக்தி, நீர் மின்சாரத்தை உள்ளடக்கிய பசுமை மின்சாரத்திற்கு தனி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம், 2010ல் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களாக பிரிக்கப்பட்டன. மின் தொடரமைப்பு கழகம், மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, அதிக திறனி லான மின் வழித்தடங்களில் எடுத்து செல்லும் பணிகளை மேற்கொள்கிறது.

தனி நிறுவனம்


மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, அனல், நீர், எரிவாயு மின் நிலையங்கள் உள்ளன; இதுவே, மாநிலம் முழுதும் அனைத்து பிரிவுகளுக்கும் மின் வினியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது.

தமிழக அரசு, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, 2023ல் தாக்கல் செய்த போது, 'தமிழகத்தில், பசுமை மின்சாரத்திற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால், அதற்கென தனி நிறுவனம் துவக்கப்படும்' என, தெரிவித்தது.

மின் பகிர்மான கழகத்திற்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. எனவே, அந்நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சரிசெய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக, இ.ஒய்., என்ற ஆய்வு நிறுவனத்திடம், மின் வாரியம் ஆலோசனை கேட்டது. அந்த நிறுவனம், மின் வாரிய செயல்பாடு, நிதி விவகாரம் தொடர்பாக தீவிர ஆய்வு செய்தது.

மறுசீரமைப்பு


அதன் அடிப்படையில் செலவினம், கடனை குறைக்க, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை, மின் உற்பத்திக்கு ஒரு நிறுவனம், மின் பகிர்மானத்துக்கு ஒரு நிறுவனம், பசுமை மின்சாரத்துக்கு ஒரு நிறுவனம் என, மூன்று தனி நிறுவனங்களாக மறுசீரமைக்குமாறு ஆலோசனை வழங்கியது. இதையடுத்து தற்போது மூன்று நிறுவனங்களாக பிரிக்க அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவை எரிசக்தி துறை செயலர் பீலா ராஜேஷ் பிறப்பித்து உள்ளார்.

அதில், அனல் மின் உற்பத்தி கழகமானது, 'தமிழக மின் உற்பத்தி கழகம்' என்ற பெயரில் செயல்படும்.

* மின் உற்பத்தி நிறுவனத்தின் கீழ், ஐந்து அனல் மின் நிலையங்களும், நான்கு எரிவாயு மின் நிலையங்களும் வரும். புதிய அனல் மின் நிலையங்களின் கட்டுமான பணிகளை அது கண்காணிக்க வேண்டும்; நிலக்கரி உள்ளிட்ட எரிபொருள் கொள்முதலையும் மேற்கொள்ளும்

* மின் வினியோக நிறுவனம், தமிழகம் முழுதும் மின் வினியோக பணிகளை மேற்கொள்ளும். மின் கொள்முதல், நுகர்வோர் சேவைகள், மின் வழித்தட கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளை செய்யும்

* தமிழக அரசின் 'டெடா' எனும் எரிசக்தி மேம்பாட்டு முகமையும், மரபு சாரா மின்சார பிரிவும் இணைக்கப்பட்டு துவக்கப்பட உள்ள பசுமை மின்சார கழகத்தின் கீழ், 46 நீர் மின் நிலையங்கள், ஒரு நீரேற்று மின் நிலையமும் இடம்பெறும்.

சூரியசக்தி, காற்றாலையை உள்ளடக்கிய பசுமை மின்சாரத்தில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன், கடலில் காற்றாலை அமைத்தல், நீரேற்று மின் திட்டங்கள், பசுமை மின்சாரத்தை சேமிக்கும், 'ஸ்டோரேஜ்' கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதை ஒருங்கிணைக்கும்; பசுமை மின்சார கொள்முதல் செய்வதுடன், பசுமை மின் திட்டங்களுக்கு ஒற்றரை சாளர முறையில் அனுமதி தரும் முகமையாக இருக்கும்.

மேற்கண்ட மூன்று நிறுவனத்துக்கும் தலா ஒரு தலைவர், மேலாண் இயக்குனர் உட்பட ஒன்பது பேர் உடைய இயக்குனர்கள் குழு இருக்கும். அவை, மின் வாரியத்தின் துணை நிறுவனங்களாக இருக்கும்.






      Dinamalar
      Follow us