sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

யார் எல்லாம் கிரெடிட் கார்டை பயன்படுத்தக்கூடாது தெரியுமா?

/

யார் எல்லாம் கிரெடிட் கார்டை பயன்படுத்தக்கூடாது தெரியுமா?

யார் எல்லாம் கிரெடிட் கார்டை பயன்படுத்தக்கூடாது தெரியுமா?

யார் எல்லாம் கிரெடிட் கார்டை பயன்படுத்தக்கூடாது தெரியுமா?


ADDED : ஆக 12, 2024 03:31 AM

Google News

ADDED : ஆக 12, 2024 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிரெடிட் கார்டை சிறப்பாக பயன்படுத்துவதற்கும், கார்டு பயன்பாடு மூலம் அதிக பயன் பெறுவதற்குமான வழிமுறைகள் இருக்கின்றன. கிரெடிட் கார்டு பயன்பாட்டில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகளும் இருக்கின்றன.

சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் கிரெடிட் கார்டு உங்கள் நண்பனாக இருக்கும். அவசர காலத்தில் கைகொடுக்கும் நிதி சாதனமாகவும் இருக்கும். ஆனால், நிதி நிர்வாகத்தில் திறன் இல்லாதவர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தக்கூடாது என, வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில், எந்த வகையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் கார்டை பயன்படுத்தக்கூடாது என பார்க்கலாம்.

சுழலும் கடன்:


உரிய காலத்தில் கார்டு நிலுவைத் தொகையை செலுத்துவதே சிறந்தது. ஒரு சிலர், குறைந்தபட்ச தொகையை மட்டுமே செலுத்தி, எஞ்சிய தொகையை நிலுவையில் வைத்திருக்கும் பழக்கம் கொண்டிருக்கலாம். இது கடன் வலையில் சிக்க வைக்கும். எனவே, கடனை அடைக்க கடன் வாங்கும் பழக்கம் கொண்டவர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தக்கூடாது.

செலவாளிகள்:


அதேபோல, ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் கொண்டவர்கள் கையில், கிரெடிட் கார்டு இருப்பதும் ஆபத்தானது. தேவையில்லாமல் செலவு செய்யும் பழக்கத்தால், இவர்கள் கடன் வரம்பை மீறி செலவு செய்து நிதி பிரச்னையில் சிக்கிக் கொள்ளலாம். இது கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும்.

தள்ளிப்போடுபவர்கள்:


கிரெடிட் கார்டு பயன்பாட்டில் குறித்த காலத்தில் பரிவர்த்தனை செய்வது முக்கியம். பில்கள்,

தவணைகள் எல்லாவற்றையும் உரிய காலத்தில் செலுத்த வேண்டும். மாறாக, சீரான நிதிப்பழக்கம் இல்லாமல், பில் தொகை செலுத்துவதை தள்ளிப்போடும் பழக்கம் கொண்டவர்களுக்கு கிரெடிட் கார்டு பாதகமாக அமையலாம்.

கூடுதல் கடன்:


தனிநபர் கடன் உள்ளிட்ட பலவகை கடன் பெறும் பழக்கம் கொண்டவர்களும் கிரெடிட் கார்டை

தவிர்க்க வேண்டும். கடன் பொறுப்புகள் இருக்கும் போது கார்டு பயன்பாடு கூடுதல் கடன் சுமையை உண்டாக்கலாம். மேலும், தினசரி தேவைகளுக்காகவும் கிரெடிட் கார்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

நிதி ஒழுக்கம்:


பொதுவாக, நிதி விஷயங்களில் கட்டுப்பாடு இல்லாதவர்கள் கிரெடிட் கார்டை தவிர்ப்பதே நல்லது. ஏனெனில், ரொக்கத்தை பயன்படுத்துவதை விட கார்டில் அதிகமாக செலவு செய்ய நேரலாம். தவிர கார்டு விஷயங்களை கவனமாக கையாளவில்லை என்றாலும் சிக்கல் தான்.






      Dinamalar
      Follow us