ADDED : பிப் 10, 2026 04:14 AM

-- நமது நிருபர் -
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட, ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான மத்துாரம்மா கோ வில் உள்ளது.
கிராம தே வதையான மத்துாரம்மா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரலில் கொண்டாடப்படும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
கருவறையில் சிக்கம்மா, தொட்டம்மா என்று இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. திருவிழாவின் போது, 120 அடி உயரமுடைய தேர், வீதிகளில் உலா வரும். இந்த தேரின் மீது வாழைப்பழத்தில் நாம் மனதில் நினைப்பதை எழுதி வீசினால் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தொற்றுநோயால் பாதிக்கப்படுவோர், கோவிலில் வந்து அம்மனை தரிசித்து சென்றால், நோய் வேகமாக குணம் அடையும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த கோவிலுக்கு எலக்ட்ரானிக் சிட்டி, சர்ஜாபூர், ஓசூரில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
கோவில் நடை தினமும், காலை, 5:30 முதல் இரவு, 8:30 மணி வரை திறந்திருக்கும்.
கோவில் முன் வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது.

