ADDED : டிச 07, 2025 06:58 AM
அ நிறம் | அளவு
உடுப்பி: உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் இன்று நடக்கும் கீதா பாராயணம் நிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினரா க பங்கேற்கிறார்.
உடுப்பி டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலில் கடந்த மாதம் 28ம் தேதி, கீதா பாராயணம் நிகழ்ச்சி துவங்கியது.
இதன் துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில், இதன் நிறைவு விழா இன்று நடக்கிறது.
இதில், ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இதை கோவில் நிர்வாகத்தினர் அறிவித்து உள்ளனர்.
