sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

குழந்தை திருமணங்கள் தொடர்பாக 10 மாதங்களில்... 2,600 வழக்குகள்! சட்டசபையில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தகவல்

/

குழந்தை திருமணங்கள் தொடர்பாக 10 மாதங்களில்... 2,600 வழக்குகள்! சட்டசபையில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தகவல்

குழந்தை திருமணங்கள் தொடர்பாக 10 மாதங்களில்... 2,600 வழக்குகள்! சட்டசபையில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தகவல்

குழந்தை திருமணங்கள் தொடர்பாக 10 மாதங்களில்... 2,600 வழக்குகள்! சட்டசபையில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தகவல்


ADDED : டிச 14, 2025 07:34 AM

Google News

ADDED : டிச 14, 2025 07:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: கர்நாடகாவில் நடப்பு ஆண்டில், அக்டோபர் வரையிலான 10 மாதங்களில், 2,600க்கும் மேற்பட்ட குழந்தை திருமண வழக்குகள் பதிவாகி உள்ளதாக சட்டசபையில் குழந்தைகள், பெண்கள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள பல மாவட்டங்களிலும், குழந்தை திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடக்கின்றன. இதில், சில திருமணங்கள் மட்டுமே போலீசாரின் தலையீட்டால் தடைபடுகின்றன. மற்றவை நடந்து முடிந்த பல நாட்களுக்கு பின்னரே வெளிச்சத்திற்கு வருகின்றன.

இதனால், பல சிறுமியரின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதற்கு பெற்றோரின் தவறான முடிவும் காரணமாகின்றன. இது மாநிலத்தில் தொடர் பிரச்னையாகவே பார்க்கப் படுகிறது.

இதற்கு வறுமை, கல்வியறிவின்மை, விழிப்புணர்வு இல்லாதது போன்றவை காரணமாக கூறப்படுகின்றன. குழந்தை திருமணங்களை தடுக்க, மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

இருப்பினும், குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அறிக்கை தாக்கல் இது குறித்து, பெலகாவியில் நடந்து வரும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில், பா.ஜ.,வினர் கேள்வி எழுப்பினர்.

'கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் நடந்த குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என கோஷம் எழுப்பினர். இதற்கு குழந்தைகள், பெண்கள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் எழுத்துப்பூர்வமான அறிக்கையை சமர்ப்பித்தார்.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:



கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதம் வரை, 2,623 குழந்தை திருமணங்கள் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 2,059 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. 2023ல் 2,601 வழக்குகள் பதிவாகின. இதில், 1,775 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

கடந்த 2024ல் 3,127 வழக்குகள் பதிவாகின. இதில், 2,323 திருமணங்கள் நிறுத்தப்பட்டன. இப்படி கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 8,351 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகின.

இதில், 6,157 திருமணங்கள் நிறுத்தப்பட்டன. பெங்களூரில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 324 வழக்குகள் பதிவாகின.

குழந்தை திருமணம் குறித்து தகவல் கிடைத்தும், அதை தடுப்பது சவாலான விஷயமாக உள்ளது. ஏனெனில், உள்ளூர் மக்களின் ஆதரவு இல்லாமல் குழந்தை திருமணங்களை தடுப்பது கடினமாக உள்ளது.

குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக செயல்படுவதும் குற்றமே என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதிகாரிகள் பொறுப்பு குழந்தை திருமணங்கள் தடுக்கப்படவில்லை என்றால், பிரசவத்தின் போது தாய் அல்லது குழந்தை உயிரிழக்கும் சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்பு அதிகமாகிவிடும்.

குழந்தை திருமணங்கள் நடந்தால், போலீசாருக்கு காத்திருக்காமல் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளே சம்பவ இடத்திற்கு சென்று தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கான பொறுப்பை அவர்கள் தட்டிக்கழிக்க கூடாது.

குழந்தை திருமணங்களை திட்டமிடுபவர்களையும், ஒரு குழந்தையை பெரியவருடன் திருமணம் செய்து வைப்பவர்களையும் தண்டிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தை திருமண தடை சட்டம் 2006ல் திருத்தங்கள் செய்ய வேண்டியது முக்கியமாக இருக்கிறது. ஏனெனில், இந்த சட்டத்தில் கடும் தண்டனைகள் எதுமில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us