/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - உதிர்ந்து போன நட்புகள்!

கவிதைச்சோலை - உதிர்ந்து போன நட்புகள்!

கவிதைச்சோலை - உதிர்ந்து போன நட்புகள்!

கவிதைச்சோலை - உதிர்ந்து போன நட்புகள்!

கவிதைச்சோலை - உதிர்ந்து போன நட்புகள்!

PUBLISHED ON : ஆக 04, 2024


Google News
Latest Tamil News
முட்களாக குத்தும்

விஷமிக்க வார்த்தைகள்

வலிமையான இதயத்தையும்

வலிக்கச் செய்யும்!

கள்ள கபடமில்லாமல்

சிரித்து பழகும்

உயர்ந்த குணம்

உள்ளத்தில் இல்லையென்றாலும்

மனங்களை ரணமாக்காமல்

சிந்தித்து பேச வேண்டும்!

* நெஞ்சை உலுக்கும்

நஞ்சு பேச்சுகள்

பிஞ்சு உள்ளத்தையும்

புரட்டி போடும் என்பதால்

நயமான வார்த்தைகள்

நரம்பில்லாத நாக்கிலிருந்து

புறப்பட வேண்டும்!

* சமுதாயத்திற்கு ஒத்துவராத

சபிக்கப்பட்ட வார்த்தைகளை

சபை நடுவில் பேசும்போது

சங்கடங்கள் முளைத்து

சந்தி சிரிக்க வைத்துவிடும்!

* சொந்த பந்தங்கள்மனம்விட்டு பேசுமிடத்தில்

விஷமத்தனத்தை சொருகி

உறவை விரிசலாக்கி

அப்பளம் போல நட்பை

நொறுங்க செய்ய வேண்டாம்!

* சகிக்க முடியாத வார்த்தைகளை

சம்பந்தமே இல்லாத இடத்தில்

சரியென நினைத்து

உளறி கொட்டும் போது

வெறுப்பை நாமாக

விலை கொடுத்து

வாங்க வேண்டியிருக்கும்!

* உயர்ந்த சிந்தனைகள்

உறவுகளை பிரிப்பதில்லை

உதிர்ந்துபோன நட்புகள்

லட்சியத்தை தொடுவதில்லை!

- எல்.மூர்த்தி, கோவை.