உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 02, 2026 12:26 AM

அ நிறம் | அளவு
உலக நன்செய் தினம்
அதிகம் நீர் வசதி உள்ள விவசாய பகுதிகள் நன்செய், ஈர நிலங்கள் என அழைக்கப்படுகின்றன. இதில் நெல், கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. மக்களுக்கும், பூமிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப்.2ல் உலக நன்செய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'நன்செய் நிலமும் பாரம்பரிய அறிவும்: கலாசார பாரம்பரியத்தைக் கொண்டாடுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 8ல் ஒருவர், வாழ்வாதாரத்துக்கு நன்செய் நிலத்தை நம்பி உள்ளனர். கடற்கரையோரம் வசிப்பவர்களில் 60 சதவீதம் பேரை புயல், சுனாமியில் இருந்து பாதுகாக்கிறது.
