/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : தேசிய நல்லாட்சி தினம்
/
தகவல் சுரங்கம் : தேசிய நல்லாட்சி தினம்
PUBLISHED ON : டிச 25, 2025 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
தேசிய நல்லாட்சி தினம்
அரசியல், கவிதை, பத்திரிகை, சிறந்த மேடை சொற்பொழிவு என பன்முக திறமை கொண்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய். இவரது பிறந்த தினமான டிச.,25 'தேசிய நல்லாட்சி தினமாக' கடைபிடிக்க படுகிறது. வாஜ்பாய் முதல்முறையாக 1957ல் லோக்சபா எம்.பி., ஆனார். 2004 வரை 10 முறை எம்.பி., ஆக தேர்வானார். மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர். 1998ல் பொக்ரானில் அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி உலகை திரும்பி பார்க்க வைத்தார். நான்கு வழிச்சாலை திட்டத்தை அறிமுகப்படுத்தி, சாலை போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தினார்.

