உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 10, 2026 10:48 PM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
தாய்மை பாதுகாப்பு தினம்
தாய்மையை போற்றும் விதமாகவும், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மத்திய அரசு சார்பில் ஏப். 11ல் தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது. தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான தருணம். இந்நேரத்தில் அவர்களது ஆரோக்கியம், பிரசவத்துக்குப்பின் தாய், குழந்தையின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, தரமான மருத்துவ வசதி, பிரசவத்துக்குப்பின் குழந்தைகளுக்கான தடுப்பூசி உள்ளிட்ட வசதிகளை வழங்க வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.
