sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'மிரட்டினால் தான் புத்தி வருது!'

/

 'மிரட்டினால் தான் புத்தி வருது!'

 'மிரட்டினால் தான் புத்தி வருது!'

 'மிரட்டினால் தான் புத்தி வருது!'

1


PUBLISHED ON : டிச 18, 2025 03:31 AM

Google News

PUBLISHED ON : டிச 18, 2025 03:31 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி சின்னக்காளி பாளையம் கிராமத்தில், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்டு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமீபத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் அதிகமான பெண்கள் பங்கேற்றதால், அவர்கள் இயற்கை உபாதை கழிக்கப் பயன்படுத்துவதற்காக, எங்கு வேண்டுமானாலும் நகர்த்திச் செல்லக்கூடிய, தற்காலிக கழிப்பறைகளை போலீசார் கொண்டு வந்திருந்தனர்; ஆனாலும், அவற்றை பயன்படுத்த, யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

இதனால், ஆவேசமான சில பெண்கள், 'கழிப்பறையைப் பயன்படுத்தக் கூட, உங்களிடம் அனுமதி பெற வேண்டுமா? இது மிகவும் மோசமான மனித உரிமை மீறல். நிச்சயமாக இதற்கு, கோர்ட்டில் நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்' என, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தற்காலிக கழிப்பறைகளை பயன்படுத்த, போலீசார் அனுமதித்தனர்.

இதை பார்த்த ஒரு பெண்மணி, 'மயிலே மயிலே இறகு போடுன்னா போடுமா...? மிரட்டினால் தான் நம்ம போலீசாருக்கு புத்தி வருது...' என முணுமுணுக்க, சக பெண்கள் ஆமோதித்தனர்.






      Dinamalar
      Follow us