sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்டம்பர் 12, 1912

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில்,ஜஹாங்கீர் பரிடூன் - ரட்டிமை ஹட்டா தம்பதியின் மகனாக, 1912ல், இதே நாளில் பிறந்தவர் பெரோஸ் காந்தி.

இவர் அலஹாபாத் உயர்நிலைப் பள்ளி, ஈவிங் கிறிஸ்துவ கல்லுாரி, லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் படித்தார். இவர் படித்த கல்லுாரிக்குவெளியே, 'வானர் சேனா' அமைப்பின் சார்பில், விடுதலை போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற நேருவின் மனைவி கமலா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

அவருக்கு உதவிய இவரும், படிப்பை கைவிட்டு, விடுதலை போரில் ஈடுபட்டார். நேரு சிறையில் இருந்தபோது, காச நோயால் பாதிக்கப்பட்ட கமலாவை கவனித்துக் கொண்டார். நேருவின்மகள் இந்திரா, இவரை காதலித்து மணந்தார். இருவரும், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றனர்.

சுதந்திரத்துக்கு பின், ரேபரேலி தொகுதி எம்.பி.,யானார். 'நேஷனல் ஹெரால்ட்' பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரானார். ஊழல் செய்த அமைச்சர்கள் குறித்து தன், 'நவ் ஜீவன்' பத்திரிகைகளில் எழுதி, நேரு கோபத்துக்கு ஆளான இவர், 1960, செப்., 8ல் தன், 48வது வயதில் திடீர் மாரடைப்பால் காலமானார்.

'காந்தி' எனும் பெயரை இந்திரா குடும்பத்திற்கு தந்தவர் பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us