sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

பறவைகளுக்கும் தாகம் எடுக்கும்ல! பாத்திரத்துடன் இதோ நீள்கின்றன உதவும் கரங்கள்

/

பறவைகளுக்கும் தாகம் எடுக்கும்ல! பாத்திரத்துடன் இதோ நீள்கின்றன உதவும் கரங்கள்

பறவைகளுக்கும் தாகம் எடுக்கும்ல! பாத்திரத்துடன் இதோ நீள்கின்றன உதவும் கரங்கள்

பறவைகளுக்கும் தாகம் எடுக்கும்ல! பாத்திரத்துடன் இதோ நீள்கின்றன உதவும் கரங்கள்


UPDATED : மார் 13, 2024 11:10 AM

ADDED : மார் 13, 2024 01:25 AM

Google News

UPDATED : மார் 13, 2024 11:10 AM ADDED : மார் 13, 2024 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;பறவைகள், விலங்கினங்களின் தாகம் தணிக்கவும், சூட்டை குறைக்கவும், கோவை நகர் முழுவதும், 600 இடங்களில் தண்ணீர் குவளை வைக்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. பறவைகள், விலங்கினங்கள் தாகம் தணிக்க தண்ணீர் இல்லாமலும், வெப்பத்தை தாங்க முடியாமலும் அவதிப்படுகின்றன. இதுபோன்ற தருணங்களில், பிராணிகள் நலச்சங்கத்தினர், தண்ணீர் குவளைகள் வைப்பது வழக்கம்.

ஒவ்வொருவரும் தங்களது வீடுகளின் மொட்டை மாடியில், பறவைகளுக்காக தண்ணீர் குவளை வைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு கால்நடைத்துறை, பிராணிகள் நலச்சங்கம் மற்றும் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப், இண்டஸ்ட்ரியல் சிட்டி ரோட்டரி கிளப்புகள் மற்றும் 'யங் இண்டியன்ஸ்' அமைப்பு இணைந்து, கோவை நகர் முழுவதும் தண்ணீர் குவளை வைக்கும் திட்டத்தை துவக்கியுள்ளன. இவ்விழா, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

பிராணிகள் நலச்சங்கத்தின் தலைவரான, கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார். கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி, துணை இயக்குனர் திருக்குமரன் முன்னிலை வகித்தனர்.

பிராணிகள் நலச்சங்க துணை தலைவர் அபர்ணா சங்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஷோபனா, மனோஜ் ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்தாண்டு, 400 இடங்களில் தண்ணீர் குவளை வைக்கப்பட்டது. நடப்பாண்டு கூடுதலாக, 200 இடங்கள் சேர்த்து, 600 குவளை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரோட்டரி கிளப்புகள் சார்பில் குவளை தரப்படுகிறது; குவளைகளை சுத்தம் செய்து, தினமும் தண்ணீர் நிரப்பும் பணியை, தன்னார்வலர்கள் செய்ய உள்ளனர்.

மண் பாத்திரம் வேண்டுமா?

தாகத்தால் தவிக்கும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க, மண் பாத்திரங்களை வழங்கி வருகின்றனர், வனஉயிர், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினர்.அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிராஜூதீன் கூறியதாவது:இன்று நாம் வனவிலங்குகள், பறவைகளின் வாழ்விடங்களை அழித்து வருகிறோம். அவற்றை காக்கும் சிறிய முயற்சியை, யாராவது ஒருவர் செய்தாலே அது சிறந்தது. பல நீர்நிலைகள் இன்று இல்லை. இதன் காரணமாக பறவைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.வெய்யிலும் அதிகரித்து வருவதால், தண்ணீரின்றி பறவைகள் இறக்கின்றன. இதை தவிர்க்க கடந்த மூன்று ஆண்டுகளாக, மண் பாத்திரங்களை வழங்கி வருகிறோம். கடந்தாண்டு, 450 பேருக்கு இந்த பாத்திரங்களை வழங்கினோம்.இந்தாண்டு, ஏற்கனவே 150 பேருக்கு வழங்கியுள்ளோம். மண் பாத்திரங்கள் விரும்புவோர், 97900 51666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us