உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜானகியின் நினைவிடத்தில் தியான மண்டபம்: கன்னட இசையமைப்பாளர் விருப்பம்

ஜானகியின் நினைவிடத்தில் தியான மண்டபம்: கன்னட இசையமைப்பாளர் விருப்பம்


மறைந்த பிரபல பாடகி எஸ்.ஜானகியின் உடல் கர்நாடகா மாநிலம் மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, பொதுமக்கள், அம்மாநில திரை பிரபலங்கள் என பலரும் வரிசையாக நின்று அஞ்சலி செலுத்தினர்.

கன்னட திரை உலகின் இசையமைப்பாளர் அம்சலேகா, ஜானகியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியப்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இந்திய திரையுலகில் பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மாவை அடக்கம் செய்யும் இடத்தில், இந்த இடத்தின் உரிமையாளர்கள் விரும்பினால் ஜானகி நினைவாக அங்கு தியான மண்டபம் கட்டுவதற்கு நான் தயார் ஆக உள்ளேன். நமது சார்பில் தியான மந்திர மண்டபம் கட்டுகிறோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !