வாசகர்கள் கருத்துகள் (1)
Also, we recommend to CM sir for increasing the popcorn to 600Rs, water bottle - 250Rs, Puff=250Rs, Icecream = 300Rs as Theatre owners are poor in wealth than farmers!!
தமிழக முதல்வராக சினிமா துறையை சேர்ந்த நடிகர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். இதனால் தான் வளர்ந்த துறைக்கு முதல்வர் நிச்சயம் ஏதாவது நல்லது செய்வார் என தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினர் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருவதோடு, சில கோரிக்கைகளையும் அவரிடம் முன் வைத்து வருகின்றனர். நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கத்தை தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் முதல்வரை சந்தித்து பத்து அம்சம் கொண்ட கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதன் விபரம் வருமாறு....
1. மல்டிபிளக்ஸ் மாற்றங்களுக்கான ஒற்றைச் சாளர முறை எளிமைப்படுத்தல். இதற்காக கட்டிட மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். குறிப்பாக உரிமம் வழங்கும் அதிகாரியால் (மாவட்ட ஆட்சியர்) நிர்வகிக்கப்படும் ஒற்றைச் சாளர ஒப்புதல் முறையை செயல்படுத்துவதோடு, பொதுப்பணித்துறை ஒப்புதலின் அடிப்படையில் மட்டுமே கட்டிடத்திற்குள் திரைகளை மாற்ற அனுமதிக்க வேண்டும். இதற்கான ஒப்புதல் காலக்கெடு இரண்டு வாரங்களாக இருக்க வேண்டும்.
2. 3 ஆண்டு உரிமப் புதுப்பித்தல் சுழற்சியை நடைமுறைப்படுத்துதல்.
3. இன்று, மாநிலத்தில் உள்ள 100% திரைகளும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டன. எனவே, தற்போது காலாவதியாகிவிட்ட குறிப்பிட்ட இடத்திற்கான கட்டாய ப்ரொஜெக்டிஸ்ட் ஆபரேட்டர் உரிமத் தேவைகளை நீக்குமாறு வேண்டுகிறோம்.
4. தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் பொழுதுபோக்கு வரிக்கு (தமிழ் மொழித் திரைப்படங்களுக்கு 4% வரை) உட்பட்டுள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும். இது நேரடியாக கட்டணக் குறைப்புக்கு வழிவகுக்கும்.
5. சந்தை தேவையின் அடிப்படையில் 24 மணி நேரமும் காட்சிகளைத் திரையிடவும், சுழற்சி முறையில் இயக்கவும் அனுமதி கோருகிறோம். அதே வேளையில், பார்வையாளர்களுக்கு அனைத்து நேரங்களிலும் முழுமையான பாதுகாப்பு, அரண் மற்றும் தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
6. திரையரங்கை பாதுகாக்க 8 வாரம் கழித்து தான் ஒரு படத்தை ஓடிடியில் திரையிட அனுமதிக்க வேண்டும் என அரசாங்கமே பரிந்துரைக்க வேண்டும்.
7. நவீன மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட திரையரங்குகளுக்கு குறிப்பாக பிரீமியம் லார்ஜ் பார்மட் (PLF) மற்றும் சாய்வு இருக்கை வசதி கொண்ட சொகுசுத் திரைகளுக்கு ரூ. 450 வரையிலும், சாதாரண திரையரங்குகளுக்கு ரூ. 300 வரையிலும் அதிகபட்ச கட்டண வரம்பை நாங்கள் முன்மொழிகிறோம்.
8. மாநிலத்தின் மின் கட்டணங்கள் அதிகப்படியான நிலையான மற்றும் வணிகரீதியான நுகர்வு கட்டணங்கள் மூலம் திரையரங்குகளுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துகின்றன. எனவே, திரையரங்கு செயல்பாடுகளைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள ஏதுவாக, காட்சித் துறைக்கு மின் கட்டணச் சலுகைகள் அல்லது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான (MSME-level) அடுக்கு நன்மைகளை (Slab benefits) வழங்குமாறு கோருகிறோம்.
9. சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு மாநில அரசின் கூடுதல் ஆதரவை வழங்குமாறு கோருகிறோம்.
10. திரையரங்கு அரங்குகளைப் பல்துறைப் பயன்பாட்டிற்கு அனுமதித்தல். உதாரணத்திற்கு நேரடி விளையாட்டுப் போட்டிகளைத் திரையிடுதல், ஸ்டாண்ட்-அப் காமெடி (Stand-up comedy), கார்ப்பரேட் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள், வீடியோ கான்பரன்சிங் மற்றும் கல்வி சார்ந்த கருத்தரங்குகள் போன்ற மாற்று சமூக-கலாச்சார நிகழ்வுகளுக்காக, திரைப்படம் திரையிடப்படாத நேரங்களில் இந்த அரங்குகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதியை வழங்குமாறு கோருகிறோம்.
Also, we recommend to CM sir for increasing the popcorn to 600Rs, water bottle - 250Rs, Puff=250Rs, Icecream = 300Rs as Theatre owners are poor in wealth than farmers!!