உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிமான்டி காலனி 6 பாகங்கள் வரை வரும் : இயக்குனர் தகவல்

டிமான்டி காலனி 6 பாகங்கள் வரை வரும் : இயக்குனர் தகவல்

அருள்நிதி நடிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி 2015 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இரு பாகங்களாக வெளியான 'டிமான்டி காலனி' படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதன் 3ம் பாகம் தயாராகி உள்ளது. 'டிமான்ட்டி காலனி 3: தி எண்ட் இஸ் டூ பார்' என்ற பெயரில் தயாராகி உள்ள இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் , குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சென்னை, லடாக், போர்ச்சுகல் மற்றும் மால்டா போன்ற பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களில் 80 நாட்களாக நடத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வருகிற ஜூன் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் அஜய் ஞானமுத்து, ‛டிமாண்டி காலனி' படம் 6 பாகங்கள் வரை வெளியாகும், அதற்கான கதை தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: எத்தனை த்ரில்லர் படங்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனாலும் அதில் 'டிமான்ட்டி காலனி' இரண்டு பாகங்களும் தனி வித்தியாசம் காட்டும். அந்த வகையில்தான் இந்த 'டிமான்ட்டி காலனி 3'-ஐ உருவாக்கி இருக்கிறோம். வெறும் ஹாரர் த்ரில்லராக இல்லாமல், கேரக்டர்களின் எமோஷனலும், புதிய கருவைக் கொண்டு வந்து தருகிற முயற்சியும் இந்தக் கதையின் முக்கிய அம்சங்கள்.

'டிமான்ட்டி காலனி 2' வரும்போது பாகம் 1 ரொம்பவும் நன்றாக இருந்தது என்றார்கள். முதல் படம், அடுத்தடுத்துப் போகப் போகிறது என்ற எண்ணம் இல்லாமல் செய்த படம். இரண்டாவது செய்யும்போது லாஜிக்கையும் சொல்லி, அதைக் கதையோடு ஒருங்கிணைக்க வேண்டும். ஒன்றுக்கொன்று கனெக்ட்டாக வேண்டியதும் அவசியம். இப்போது ஏன், எதனால் அப்படி என்று சொல்லியிருக்கிறோம். இதன் பின்னணியில் ஒரு சாபம் இருப்பதையும், அது என்ன சாபம், அதற்கான ஆரம்பம் என்ன என்பதையும் சொல்லியிருக்கிறோம். 'டிமான்ட்டி காலனி'யின் கதை 6 பாகங்கள் வரை இருக்கிறது. என்கிறார் அஜய்ஞானமுத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !