/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
வினோபாஜி
/
கொடுப்பதனால் செல்வம் பெருகும்
/
கொடுப்பதனால் செல்வம் பெருகும்
ADDED : அக் 03, 2008 07:12 PM

<P>* கடவுளை நிச்சயமாகக் காணமுடியும். அதற்கு தேவை நம்பிக்கை. </P>
<P>* பணத்தை மட்டுமே குறிக் கோளாகக் கொண்டு வேலை செய்யக்கூடாது. பிறர் நன்மைக் காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே பரவ வேண்டும்.
<P></P>
<P>* மனிதர்களுக்குள் சமத்துவம் மிக அவசியம். ஆனால், அன்பில்லாத சமத்துவத்தால் பகைதான் மிஞ்சும்
<P></P>
<P>* இவ்வுலகில் ஆசையில்லாதவன் இறைவன் மட்டுமே. எனவே, அவனை நீங்கள் பின்தொடருங்கள். உள்ளத்திலுள்ள ஆசைகளைக் களைவதற்கு அவன் ஒருவனால் மட்டுமே முடியும்.
<P></P>
<P>* அராஜகச் செயல்கள் பெருகுவதற்கு காரணமே மன உறுதியின்மைதான். அஹிம்சை நெறியுடைய நாட்டிற்கு காவல்துறை தேவையில்லை. தொண்டர் படையே போதுமானது.
<P></P>
<P>* கொடுப்பதால் தான் செல்வம் பெருகுகிறது. ஈவதில் தான் மனிதனுக்கு இன்பம் பிறக்கிறது. தன்னுடையது என்ற உரிமையும் எண்ணமும் இதற்கு பாதகம் செய்கிறது.
<P></P>
<P>* சூரியன் எத்தகைய வேற்றுமையுமின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒளி தருகிறது. அதுபோல் நாமும் யாரிடமும் வித்தியாசம் இல்லாமல் பழக வேண்டும்.</P>