ADDED : பிப் 07, 2009 10:49 AM

<P>* தீயவைகளைச் செய்யாதிருக்க நமக்கு உறுதியான மனம் வேண்டும். ஐம்பொறி இன்பங்களை நாம் அடக்க வேண்டும். ஆடல் பாடல்களைப் பார்ப்பது தேவையற்ற ஒன்றாகும்.<BR>* விரதங்களை மிகவும் புனிதமானதாக நாம் எண்ணுதல் வேண்டும். விரதங்களை நாமே அலட்சியமாக எண்ணும் தீய பழக்கங்கள் நம்மை விட்டுப் போதல் வேண்டும்.<BR>* தீயவை எல்லாம் இனிச் செய் யேன் என்கிற உறுதியான மனம் நமக்கு வேண்டும்.<BR>*உறுதியான மனம் உடையவனே துன்பத்தைப் பொறுத் துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.<BR>*இன்றைய உலகம் இன்ப கேளிக்கைகளில் மூழ்கி உள்ளது. எங்கு பார்க்கினும், 'சுகம் வேண்டும்' 'சுகம் வேண்டும்' என மக்கள் எப்படியும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் துடிக்கின்றனர். பொருளுக்காகப் பிறரை அடித்து நொறுக்கவும் தயங்கவில்லை. </P>
<P align=right><BR><STRONG>-மகாவீரர்</STRONG></P>