sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

முன்வந்து உதவி செய்

/

முன்வந்து உதவி செய்

முன்வந்து உதவி செய்

முன்வந்து உதவி செய்


ADDED : ஜூன் 05, 2011 11:06 AM

Google News

ADDED : ஜூன் 05, 2011 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதாலும், இனிமையான பேச்சாலும், உடம்பாலும், பணத்தாலும் நல்ல செயல்களை தினமும் செய்.

* நம்மிடம் உள்ள பணமெல்லாம் எப்போதும் நம்முடையதல்ல என்ற நினைவு இருக்கட்டும்.

* அனைத்து செயல்களிலும் அளவறிந்து நிற்கிற மனநிலை வந்தால் தான் அமைதி உண்டாகும்.

* நமது சொந்த விருப்பங்களுக்காக செயல்படுகிறோம் என்ற நிலையை மாற்றி, நமக்கு எவ்விதமான லாபமும் தராத செயல்களில் ஈடுபட வேண்டும்.

* தூய்மையோடு மகிழ்ச்சியாக இருப்பது தான் மங்களம். எங்கே நாம் போனாலும் அங்கே மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்.

* அவரவரும் உரிய கடமையை பக்தியோடு பின்பற்றினால் தான் மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை ஏற்பட்டு ஞானம் கைகூடும்.

* ஒழுக்கம் இருந்தால், அப்புறம் ஒவ்வொரு துறையிலுமே ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்பட்டு விடுகிறது.

* துன்பம் இருக்கும் இடத்திற்கு நாமாக முன்வந்து சென்று, அந்தத் துயரத்தை நீக்க நம்மால் முடிந்த செயலை செய்ய முயல வேண்டும். இது மிகப்பெரிய தர்மமாகக் கருதப்படுகிறது.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us