/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
இதுவே நிரந்தர மகிழ்ச்சி
/
இதுவே நிரந்தர மகிழ்ச்சி
ADDED : ஏப் 19, 2013 05:04 PM

* ஆசையைப் படிப்படியாக குறைக்க வேண்டும். இதனால் துன்பம் குறையும். ஆசை அடியோடு நீங்கி விட்டால், மீண்டும் மண்ணில் பிறவி எடுக்கத் தேவையில்லை.
* வெளியுலகில் கிடைக்கும் மகிழ்ச்சி ஒருவனுக்கு என்றென்றும் நிலைப்பதில்லை. மனதில் இருந்து உண்டாகும் மகிழ்ச்சியே என்றென்றும் நிலைத்திருக்கும்.
* வேதம் விதித்த தர்மவழிகளில் நடப்பவன் புண்ணியத்தைத் தேடுகிறான். ஆசை வயப்பட்டு பிறருக்குத் தீங்கு செய்பவன் பாவத்திற்கு ஆளாகிறான்.
* சுயநலத்தைப் பெரிதாக எண்ணாமல் சமுதாய நலனுக்காக செயல்படுபவனின் சொல், செயல் எல்லாமே புண்ணிய கர்மம் தான்.
* மனதில் எண்ணிலடங்கா ஆசைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், ஆசைப்பட்டு அடைந்த பொருள் அனைத்தும் ஒரே நாளில் நம்மை விட்டுப் பிரிந்து போய்விடும் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
- காஞ்சிப்பெரியவர்