
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நெருப்பு தன்னோடு சேர்ந்ததை சாம்பலாக்குவது போல, ஆசையும் மனிதனை அழிக்கும் இயல்பு கொண்டது.
* வயிற்றுக்கு உணவு, மானத்தை மறைக்க ஆடை, குடியிருக்க வீடு இந்த மூன்றும் அனைவருக்கும் அவசியமானவை.
* இஷ்ட தெய்வமே உயர்வானது, மற்ற தெய்வம் எல்லாம் தாழ்வானது என்று எண்ணுவது பேதமை.
* இசையுடன் மனம் ஒன்றி பாடுவதன் மூலம் இறையருளை எளிதாக அடைய முடியும்.
* நாம் நலமுடன் இருப்பதுடன், மற்றவர் நலனிலும் அக்கறை கொள்வதே சிறந்த குணம்.
- காஞ்சிப்பெரியவர்