ADDED : ஜூன் 12, 2016 03:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* போதும் என்ற மனம் மனிதனுக்கு அவசியம். இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
* உண்மை வழியில் நடப்பவர்களின் உபதேசம் காதுக்கு கிடைக்கும் அமுதமாகும்.
* சுயநலத்துடன் வாழ்வது பாவம். தனக்கும், பிறருக்கும் பயனுள்ளவராக வாழ வேண்டும்.
* இனிய சொற்களால் மற்றவர்களை மகிழ்விக்காதவன் மவுனமாக இருப்பதே சிறந்தது.
* இளமைக்காலமே திருத்தல தரிசனம் செய்ய ஏற்ற காலம். முதுமையில் தீர்த்தயாத்திரை செல்ல ஆரோக்கியம் இடம் அளிக்காது.
- ஜெயேந்திரர்