தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : பிப் 09, 2024 11:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 11:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மனிதர்களுக்கு பொதுவான தர்மங்களில் அகிம்சையே முதலானது என்கிறது மனு தர்ம சாஸ்திரம்.

* உடலால் துன்புறுத்துவது மட்டுமல்ல. யாருக்கும் எவ்விதக் கஷ்டமும் ஏற்பட வேண்டுமென மனதால் நினைப்பதும் கூடாது.

* 'அகிம்சையை பின்பற்றினேன். மனம் வசப்பட்டது' என பல மகான்கள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு காரணம் அகிம்சையால் கோபம் போகும். மனம் அன்பில் திளைக்கும்.

* அகிம்சையை முழுமையாக பின்பற்றுபவர்கள் இருக்குமிடத்தில் குரூர சிந்தனை கொண்டவர்கள் வந்தாலும் நாளடைவில் மனதில் அமைதி உண்டாகும். இதையே, 'அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம்! தத்ஸந்நிதௌ வைரத்யாக:' என்கிறது யோக சூத்திரம்.

* 'அஹிம்ஸா பரமோ தர்ம:' என ஜைன, பவுத்த மதங்களும் அனைவரும் அகிம்சையை பின்பற்ற வலியுறுத்துகின்றன. ஆனால் ஹிந்து மதம் துறவிகளுக்குத்தான் தீவிரமாக சொல்லியுள்ளது. இதனால் துறவிகள் இலையைக் கூட கிள்ளக்கூடாது. தாவரங்களைச் சமைத்து உண்ணக்கூடாது என்கிறது.

* துறவியைப் போல் இல்லற வாழ்வில் ஈடுபடுவோரும் அகிம்சையை பின்பற்ற வேண்டும் என்பதற்காக விரதமிருக்கின்றனர்.

* மனம், மொழி, மெய் என்ற திரிகரணங்களாலும் அகிம்சையைப் பின்பற்றுவோரை எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

* ஒரு கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதும், போரில் எதிரிகளை வதைப்பதும் பாவம் ஆகாது. செயலை விட நோக்கம்தான் முக்கியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us