ADDED : மே 28, 2026 10:51 AM

ராதிகா.எம், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்: பிறந்த நாளில் தானம் செய்தால்...
முன்னோர், குலதெய்வத்தின் ஆசி நிச்சயம் கிடைக்கும்.
லட்சுமி.ஆர், பூவரசன்குப்பம், விழுப்புரம்: வீட்டில் கிணறு இருந்தால் தினமும் பூஜை செய்யணுமா?
@வேண்டாம். ஆடி 18 அன்று பூஜை செய்யுங்கள்.
ஹன்ஷிகா.வி, ஊட்டி, நீலகிரி: வீட்டு வாசலில் நல்ல பாம்பு படம் எடுத்தது. பரிகாரம் உண்டா...
செவ்வாயன்று முருகன் கோயிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.
பிரனிக்கா.ஏ, திருமங்கலம், மதுரை: சுபம், லாபம் என எழுதுவது ஏன்?
இதை எழுதி விநாயகரை வழிபடுங்கள். தடை விலகி லாபம் பெருகும்.
கவுஷிகா.மா, மேலுார், துாத்துக்குடி: விட்டுப் போன தொழிலை தொடங்க நாள் பார்க்கணுமா?
நல்ல நாள் பார்த்து கணபதி ஹோமம் நடத்துங்கள்.
மோனிகா.ரா, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: யானையிடம் ஆசி பெற்றால்...
யானையிடம் (விநாயகர், மகாலட்சுமி) ஆசி பெற்றால் தடை விலகி செல்வம் பெருகும்.
சஷ்டிகா.பி, கம்பம், தேனி: பிறந்த குழந்தைக்கு திருஷ்டி விலக சிதறு தேங்காய் உடைக்கலாமா?
ஒரு வயது வரை திருஷ்டி கழிக்க வேண்டாம்.
சசிரேகா.தா, பேயன்குழி, கன்னியாகுமரி: அர்ச்சனை தேங்காய் அழுகி விட்டது. என்ன செய்வது?
வருந்த வேண்டாம். முற்றின தேங்காயால் அர்ச்சனை செய்யுங்கள்.
தன்ஷிகா.கே, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்: வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா?
உங்களை விட வயதில் குறைவான பெண்ணை திருமணம் செய்யுங்கள்.
