sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : பிப் 19, 2026 01:40 PM

Google News

ADDED : பிப் 19, 2026 01:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யுவஸ்ரீ.ஆர், செவ்வாய்பேட்டை, திருவள்ளூர்: நிரந்தர வேலை கிடைக்க என்ன ஸ்லோகம் சொல்லலாம்?

புத்திர்பலம் யசோதைர்யம்

நிர்ப்பயத்வம் அரோகதாம்|

அஜாட்யம் வாக்படுத்வம் ச

ஹனுாமத் ஸ்மரணாத் பவேத்||

இதைச் சொல்லி அனுமனை வழிபடுங்கள்.

யோகிதா.கே, திப்பசந்திரா, பெங்களூரு: ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டு?

ஒருவர் தன் சந்ததிக்கு பெற்றோர் ஆக தேவையான காலம். முன்பு 21. தற்போது 27 ஆண்டு.

ஹரிதா.மு, வில்லிவாக்கம், சென்னை: காலையில் எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பது ஏன்?

கையின் நுனியில் லட்சுமி, நடுவில் சரஸ்வதி, மணிக்கட்டில் பார்வதி ஆகிய மூவரும் உள்ளதால் பார்க்கிறோம்.

லாஸ்யா.எஸ், குறிஞ்சிப்பாடி, புதுச்சேரி: வெளியில் புறப்படுபவரை 'எங்கு போகிறீர்கள்' எனக் கேட்பது சரியா...



சரியல்ல. வேலை நடக்காவிட்டால் நீங்களே காரணம் என நினைக்கலாம்.

சாய்சரண்.ஆர், ஆத்தங்குடி, சிவகங்கை: சுவாமியின் முன் எப்போது பூப்போட்டு உத்தரவு கேட்கலாம்?



எந்த நல்ல விஷயத்திற்கும் உத்தரவு கேட்கலாம்.

ஆகாஷ்.எஸ், முக்கூடல், வள்ளியூர்: அம்பிகை உபாசகரின் படத்தை வைத்து வழிபடலாமா?

குருவாக ஏற்றுக் கொண்ட சீடர்கள் வழிபடலாம்.

சரவணன்.டி, மதுக்கரை, கோயம்புத்துார்: நம்பிக்கை துரோகம் செய்தால் பசுவைக் கொன்ற பாவம் சேருமாமே...

பாதிக்கப்பட்டவரின் வேதனையோ சொல்லி மாளாது. பசுவை கொன்ற பாவமும் சேரும்.

அமிர்தா.கே, குளச்சல், கன்னியாகுமரி: காணாமல் போன பொருள் கிடைக்க...

போலீசில் புகார் கொடுங்கள். அத்துடன் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். ''கார்த்தவீர்யார்ஜுனோ நாம

ராஜா பாஹு ஸஹஸ்ரவான்

அஸ்ய ஸம்ஸ்மரணாதேவ

ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே''

சொர்ணா.எம், ஆண்டிபட்டி, தேனி: அடிக்கடி தம்பதிக்குள் சண்டை வந்தால்...

இது சண்டை அல்ல; அன்பால் வரும் ஊடல். மனைவியுடன் உள்ள முருகன் கோயிலில் வெள்ளிதோறும் விளக்கேற்றுங்கள்.






      Dinamalar
      Follow us